செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தாயே உன் பார்வை பட்டால் 
பட்ட மரம் பூ பூக்கும் 
புண்பட்ட மனம் நோய் தீர்க்கும் 

என் மனம் கெட்டால்
உன் விரல் பட்டால்
மனம் பூ பூக்குமே
உன் விரலே மருந்தாகுமே

கலங்கும் மனம் கண்டு
கலங்காதே நான் உண்டு
என்று சொல்லி வளர்ப்பாலே
என்னை அணைப்பாலே
அன்பை தெளிப்பாலே

பள்ளி செல்லும் மழலை கண்டு
பறவை போல பறப்பாலே
என் சேவை செய்ய துடிப்பாலே

என் அன்பை நீ வளர்க்க
உன்னை நீ இழப்பாயே
உன்னையே ....இழப்பாயே
தாயே......

தொட்டிலில் என்னை ஆட்டும் பொழுது
தூக்கம் கெட்டு போனாயே
என் தூக்கம் கலைக்காது காத்...'தாயே'
என்னை பார்த்......'தாயே'
அன்பால் வளர்த்....'தாயே'
தாயே......வளர்த்....'தாயே'

தாய் கண் போன்றவள்
என் தாய் கண் போன்றவள்
நம் தாய் கண் போன்றவள்

நண்பர்களே ......
நம் தாய் கண் போன்றவள்

நியூ பேர் ; கார்த்திக்,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக